தஞ்சாவூர், ஜூன் 1 –
தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் இரா.ரேவதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இலவச மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் ,உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 694 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர். இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் இரா.ரேவதி உத்தரவிட்டார்.
தொடர்ந்து பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் அவர்களிடம் ஒரத்தநாடு வட்டம் தென்னமநாடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி முருகையன் மடக்கு சக்கரநாற்காலியும், திருவையாறு வட்டம் வளம்பகுடியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி அணண் ஸியாவுக்கு காதொலிக்கருவியும், கீழவாசல் பகுதியை சேர்ந்த லலிதா தையல் இயந்திரமும் கேட்டு விண்ணப்பித்திருந்த இன்றே வழங்கப்பட்டது. மேலும் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினை மோனல் கவிக்கு மாவட்ட கலெக்டர் இரா.ரேவதி வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் செல்வம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாள விநாயகம் அமல்ராஜ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நல அலுவலர் ரவிச்சந்திரன் சமூக பாதுகாப்புத் திட்ட தனி துணை கலெக்டர் சௌமியா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



