தக்கலை, பிப். 2 –
தக்கலை அடுத்த பரைக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ மணிகண்டன் (46). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மேரி விஜிலா (38). இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மேரி விஜிலா வீட்டிலிருந்து மாயமானார். அன்று முதல் ஸ்ரீ மணிகண்டன் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று விஷம் குடித்துவிட்டு தனது 2 வது மகனுக்கு தகவல் கூறினார்.
உடனடியாக தனது சகோதரர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஸ்ரீ மணிகண்டனை தக்கலை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். பின்னர் மேல் சீட்டுக்காக குமரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிட்சையில் இருந்த ஸ்ரீ மணிகண்டன் நேற்று உயிரிழந்தார். இது குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


