நாகர்கோவில், ஜன. 26 –
நாகர்கோவிலை அடுத்த கட்டையன்விளையை சேர்ந்தவர் அசரி (65). இவர் வடசேரியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன் தினம் இரவு இவர் வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டார். நடந்து சென்று கொண்டிருந்தபோது பார்வதிபுரம் பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வேகமாக வந்த பைக் அசரி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே அசரி உயிரிழந்தார்.
பைக் விபத்து குறித்து அறிந்ததும் நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த அசரி உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.


