தருமபுரி, செப்டம்பர் 25 –
தருமபுரி மாவட்டம் தருமபுரி ஒன்றியம் செம்மாண்டகுப்பம் ஊராட்சி பகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் செம்மாண்ட குப்பம் கூட்டுறவு சங்கம் அருகில் நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து தீர்வு காணப்பட்ட மனுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை, இலவச வீட்டு மனை பட்டா, சிட்டா பட்டா பெயர் மாற்றம், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை ஆகியவை வேண்டி துறை சார்ந்த அலுவலர்களிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். மருத்துவ முகாமில் பிபி, சர்க்கரை நோய் மற்றும் இதர நோய்களுக்கான பரிசோதனைகளை பொதுமக்கள் செய்து கொண்டனர். இந்த முகாமில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, ஒன்றிய செயலாளர் பிரபு ராஜசேகர், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



