புதுக்கடை, ஜன. 23 –
முளங்குழி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் அஜின் (31). இவர் திருமணம் ஆகாதவர். சொந்தமாக பிக்கப் வாகனம் வைத்து ஓட்டி வந்தார். அஜினுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 20-ம் தேதி மதியம் கடைசியாக அவர் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் இன்று புதுக்கடை பகுதியில் உள்ள ஒரு கடை அருகே சாலையோரம் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. வாகனத்தில் பார்த்தபோது அஜின் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். இது குறித்து புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


