சுங்கான்கடை, பிப். 10 –
ஸ்ரீ அய்யப்பா மகளிர் கல்லூரி, சுங்கான்கடை என்.எஸ்.எஸ். அலகு 97-இன் II B.Sc Zoology மாணவி ஆர். ஜீவிதா, சென்னையில் நடைபெற்ற மாநில குடியரசுத் தின அணிவகுப்பு முகாமில் (State Republic Day Parade Camp – Chennai) சிறப்பாகப் பங்கேற்று கல்லூரிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தார்.
மாநில அளவிலான இந்த முகாமில் பங்கேற்பதற்கான தேர்வுகள் மிகக் கடுமையானவை. ஒழுக்கம், அணிவகுப்பு திறன், உடல் தகுதி, தேசிய உணர்வு போன்ற பல்வேறு சுற்றுகளின் மதிப்பீட்டுகளில் சிறந்து விளங்கி ஜீவிதா மாநில அணியில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது. இச்சாதனையை முன்னிட்டு கல்லூரியில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில், டாக்டர் ஏ. பி. லிப்டன் முன்னாள் முதன்மை அறிவியலாளர் & கடல் உயிரித் தொழில்நுட்பப் பிரிவு தலைவர்,
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (ICAR), கொச்சி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஜீவிதாவுக்கு பாராட்டு சான்றிதழையும் நினைவுப்பரிசும் வழங்கினார்.
கல்லூரி முதல்வர் வி.ஆர். அஞ்சனா அவர்கள், “மாநில குடியரசுத் தின அணிவகுப்பு முகாமில் பங்கேற்பது உயர்ந்த அளவிலான ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் தேவைப்படுகின்றது. எங்கள் கல்லூரி மாணவி இந்த பெருமை வாய்ந்த மேடையில் தன்னை வெளிப்படுத்தியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்தார். என்.எஸ்.எஸ். Programme Officer டாக்டர் ஸ்ரீயா ஜி. நாயர் அவர்கள், “ஜீவிதா NSS நடவடிக்கைகளில் தொடர்ந்து செயலில் ஈடுபட்டு, சமூக சேவையில் முனைப்புடன் செயல்படுகிறார். மாநில R.D. முகாமில் அவளின் பங்கேற்பு எங்கள் NSS அலகு 97-ன் மைல்கல்லாகும்” என பாராட்டினார்.
மேலும், கல்லூரி நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு அரசு, உயர்கல்வித் துறை, மாநில NSS பிரிவு, மாவட்ட நிர்வாகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலியின்
NSS திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஏ.வேலியப்பன், பயிற்சி அதிகாரிகள் ஆகியோருக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்கும் மாணவர்கள் முன்னேற உதவியதற்கும் நன்றியை தெரிவித்தனர். கல்லூரி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் அனைவரும் ஜீவிதாவின் சாதனையை பாராட்டி, அவள் எதிர்காலத்தில் மேலும் உயர்ந்த நிலைகளை அடைய வேண்டும் என்று நல்வாழ்த்துகள் தெரிவித்தன.



