அனுப்பர்பாளையம், நவ. 18 –
திருப்பூர் மாநகராட்சி 25-வது வார்டுக்கு உட்பட்ட சிறுபூலுவபட்டியில் உள்ள காலி இடத்தில் கடந்த சில மாதங்களாக வார்டில் சேகரமாகும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் குப்பை கொட்டப்பட்டுள்ள இடத்திற்கு எதிரில் உள்ள பனியன் நிறுவனத்தை சேர்ந்த தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 15 வேலம்பாளையம் போலீசார் மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பாகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



