மார்த்தாண்டம், அக். 7 –
காட்டாதுறை ஊராட்சிக்கு உட்பட்ட சாமியார்மடம் ஊரக தினசரி சந்தை அருகே காமராஜர் பெயரில் படிப்பகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று விஜய் வசந்த் எம். பி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 20- லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய்வசந்த் எம்.பி அடிக்கல்லை நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தினகுமார், திருவட்டார் வட்டாரத் தலைவர் ஜெபா, முன்னாள் வட்டார தலைவர் ஜெகன்ராஜ், காட்டாதுறை ஊராட்சி முன்னாள் மன்ற தலைவர் இசையாஸ், துணைத் தலைவர் ஜெபதாஸ், மாவட்ட செயலாளர்கள் தங்கநநாடார், ஆற்றூர் குமார், ஜாண் வெர்ஜின், ஜஸ்டின், பஞ்சாயத்து கமிட்டி தலைவர்கள் டாம் டிக்சன், ஜோண், அச்சுதன், ஆஸ்டின்ஜிஜோ, கவுன்சிலர்கள் விஜின், விஜயராணி, ததேஸ்மேரி, வர்த்தக காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் சாமுவேல் மற்றும் வட்டார வளர்ச்சி ஆணையாளர் ராஜேஷ், ஊராட்சி ஆணையாளர் சசி, பொறியாளர் அன்றனி, ஊராட்சி செயலாளர் வின்சென்ட் உள்ளிட்ட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.



