கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், குந்தாரப்பள்ளி ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா பள்ளிகளில் நீட் நடைபெறயுள்ளதையொட்டி, முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்வு ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் , அவர்கள் தலைமையிலான குழுவினர்
நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 04.05.2025 அன்று நடைபெறும் நீட் (NEET UG – 2025) தேர்வு மையங்களாக செயல்படுவதற்கு விருப்பம் தெரிவித்த கல்வி மையங்களான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 240 மாணவர்கள், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 600 மாணவர்கள் மற்றும் குந்தாரப்பள்ளி ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் 480 மாணவர்கள் என மொத்தம் 1,320 மாணவர்கள் தேர்வு எழுதும் வகையில் தேர்வு மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்வு மைய அறைகளில் மின்சார வசதி, போதிய காற்றோட்ட வசதி, குடிநீர், கழிப்பறை வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையிலான குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பெ.தங்கதுரை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கல்வி) .சர்தார், வட்டாட்சியர் .சின்னசாமி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் .மகேந்திரன், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் (பொ) .வளர்மதி மற்றும் தனியார் பள்ளி முதல்வர், துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.



