சங்கரன்கோவில், அக். 14 –
சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி சட்டதுறை அமைச்சர் ரகுபதி மற்றும் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஆகியோரிடம் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர்.
சங்கரன்கோவில் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி சட்டதுறை அமைச்சர் ரகுபதி மற்றும் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஆகியோரிடம் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த சந்திப்பின்போது மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், சங்கரன்கோவில் வழக்கறிஞர் சங்க தலைவர் கண்ணன், அரசு வழக்கறிஞர்கள் கண்ணன், அன்புச்செல்வன், வழக்கறிஞர் சங்க துணை தலைவர் ராம்குமார், மாவட்ட வழக்கறிஞர் அணி துனை அமைப்பாளர் பிரபாகரன், வாசுதேவநல்லூர் இளைஞரணி அமைப்பாளர் செல்வகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.



