மயிலாடுதுறை, செப். 11 –
மயிலாடுதுறை தூக்கணாங்குளம் மேல்கரை தட்டாரத்தெருவில் எழுந்தருளியிருக்கும் சங்கடங்கள் தீர்க்கும் சக்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கடந்த ஒன்பதாம் தேதி முதல் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வந்தது. இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று பூர்ணாஹுதிக்கு பின்னர் கடம் புறப்பாடு நடைபெற்று சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து வந்து விமான கும்பத்தை அடைந்தனர். தொடர்ந்து கோபுரகலசத்தின் மீது புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சக்தி விநாயகர் வழிபட்டுச் சென்றனர்.



