கோவை, ஜூலை 18 –
நாட்டின் முன்னணி தேர்வுப் பயிற்சி நிறுவனமான ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் கோவையில் உள்ள தனது வகுப்பறைப் பயிற்சி மாணவர்களில் 170 பேர் தேசிய தகுதித் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வான நீட் யுஜி 2026 தேர்வில் சிறந்த தரவரிசைகளைப் பெற்றுள்ளனர்.
இதற்கு ஆகாஷ் வழங்கிய கல்வி வழிகாட்டுதல் மற்றும் கட்டமைக்கப்பட்ட கற்றல் சூழலும் முக்கிய காரணிகளாக இருந்தன. நிதின் தினகர்பாபு அகில இந்திய அளவில் (AIR) 522-வது இடத்தைப் பெற்றுள்ளார். மேலும் முத்துராகவ், ஹர்ஷிதா, வெங்கடேஷ், எம்.பூமிகா, பிரித்திகா, வாசினி என பல மாணவர்கள் சிறப்பான அகில இந்திய தரவரிசைகளைப் பெற்று கோவை மையத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இந்த ஆண்டு ஆகாஷ் மாணவர்களில் 4 பேர் அகில இந்திய தரவரிசையில் முதல் 10 இடங்களிலும், 18 பேர் முதல் 50 இடங்களிலும், 41 பேர் முதல் 100 இடங்களிலும் இடம்பெற்று தொடர்ந்து சிறப்பான சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இந்த வெற்றி எதிர்காலத்தில் ஒரு சிறந்த மருத்துவராக உருவாக இன்னும் அதிக அர்ப்பணிப்புடன் உழைக்க எங்களுக்கு ஊக்கமளிக்கிறது என்றார்.
ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் துணை மண்டல இயக்குநர் டி. சிவா பிரசாத் கூறுகையில்: மாணவர்களின் இந்தச் சாதனை ஆகாஷ் குடும்பம் முழுவதற்கும் பெருமையான தருணமாகும். இந்த சிறப்பான வெற்றிக்காக மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார்.
ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் இன் ஒருங்கிணைந்த கற்றல் அமைப்பு, அனுபவமிக்க ஆசிரியர்கள், அறிவியல் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட பாடப்பொருள், தொழில்நுட்ப ஆதரவுடன் கூடிய கற்றல், வழக்கமான மதிப்பீட்டுத் தேர்வுகள், செயற்கை நுண்ணறிவு சார்ந்த செயல்திறன் பகுப்பாய்வு மற்றும் தனிப்பட்ட வழிகாட்டுதல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து நீட் போன்ற கடுமையான போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்க உதவுகிறது. நாடு முழுவதும் பரந்து விரிந்த தனது பயிற்சி மையங்கள் மற்றும் டிஜிட்டல் கற்றல் தளங்கள் மூலம் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான மருத்துவ நுழைவுத் தேர்வு மாணவர்களுக்கு வழிகாட்டி அவர்களை ஊக்குவித்து வருகிறது.



