கோவில்பட்டி, ஆகஸ்ட் 30 –
கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி, கயத்தாறு யூனியன், ஆசூர் நாகம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற அருள்மிகு ஸ்ரீ நாகாம்பாள் திருக்கோவில் 24 ம் ஆண்டின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது. ஊர் பெரியவர்கள் அழைப்பினை ஏற்று திமுக சார்பில் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் சிறப்பு விருந்தினராக கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு ஊர் பொதுமக்கள் சார்பாக மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியினை மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் நாகம்பட்டி ஊர் நாட்டாமைகள் மற்றும் கோவில் தர்மஸ்தாகள் பூவேந்திர பாண்டியன், நட்டார், சங்கர பாண்டியன், பொயாளி முத்து, மருதையா, ஊர் பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



