மார்த்தாண்டம், நவ. 27 –
கொல்லங்கோடு அருகே சூரியகோடு பகுதியை சேர்ந்தவர் சுனிதா (37). இவரது வீட்டின் அருகே வசித்து வருவார் வனஜா. இவர் வீட்டு குப்பைகளை சுனிதா வீட்டு முன்பாக கொட்டுவது வழக்கமாம். இது சம்பந்தமாக சுனிதா, வனஜாவிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வனஜா அவரது மகன் அபினேஷ் (23) ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகள் பேசி சுனிதாவின் வயிற்றில் மிதித்து கழுத்தை நெரித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த தாக்குதல் காயமடைந்த சுனிதா குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் தாய் மற்றும் மகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


