குளச்சல், டிச. 15 –
குளச்சல் பகுதியை சேர்ந்த 36 வயது உடைய பெண் ஒருவர் ஜவுளி கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி கணவன் மற்றும் பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்தப் பெண் உடல் நலம் பாதிக்கப்பட்டு குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார்.
அப்போது அவருக்கு கோடிமுனை பகுதியை சேர்ந்த மீனவரான பஜினோ ராபின் (40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து தனது மருத்துவ சிகிச்சைக்காக அந்த பெண் பஜினோ ராபினிடம் 3 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார். பின்னர் கடனை திருப்பிக் கொடுத்து விட்டாராம்.
ஆனால் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதால் பஜினோ ராபின் அடிக்கடி அந்த பொண்ணுக்கு போன் செய்து உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். இதனால் அவரிடம் பேசுவதை பெண் நிறுத்தியுள்ளார். இதனால் அந்த பெண் மீது அவர் கோபத்தில் இருந்த பஜினோ ராபின் சம்பவ தினம் அந்தப் பெண் ஜவுளிக்கடையில் தனது பிள்ளைகளுடன் இருக்கும் போது அங்கு வந்து கெட்ட வார்த்தைகளால் திட்டி, பெண்ணை தாக்கியுள்ளார். இதனை தடுத்த அவரது பிள்ளைகளையும் தாக்கி உள்ளார்.
பின்னர் கொலை மிரட்டல் விடுத்த விட்டு அங்கிருந்து சென்று விட்டார். தாக்குதலில் காயமடைந்த பெண் குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இது குறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மீனவர் ராபின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


