தக்கலை, மார்ச் 17 –
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க குமரிமாவட்ட கமிட்டி சார்பில் குமரிதோழன் எழுதிய இந்தீவரம் என்ற நாவல் வெளியிடும் விழா அழகியமண்டபம் அன்னை ஆதா அரங்கில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் கவிஞர் ஹலிமா தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் மிகைலான் வரவேற்புரை ஆற்றினார். இந்தீவரம் நாவலை மாநில துணை பொதுசெயலாளர் வேலாயுதம் வெளியிட அதன் பிரதிகளை மாவட்ட பொருளாளர் மனோகரஜஸ்டஸ், மாநில செயற்க்குழு உறுப்பினர் ஜெயகாந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெஜிமோள் பெற்றுகொண்டனர். மாவட்ட செயலாளர் அருள்மனோ புத்தக விளக்கவுரை ஆற்றினார்.
மாநில துணை பொதுசெயலாளர் லட்சுமிகாந்தன், மாநிலக்குழு உறுப்பினர் விடியல் குமரேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். புத்தக ஆசிரியர் குமரிதோழன் ஏற்புரை ஆற்றினார். மாவட்ட இணைச் செயலாளர் சாந்தகுமார் தொகுத்து வழங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சனல் நன்றி கூறினார்.



