நாகர்கோவில், நவ. 1 –
குமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வேப்பமூடு பகுதியில் அமைந்துள்ள குமரி தந்தை என அழைக்கப்படும் மார்ஷல் நேசமணி திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்து நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, தலைமை வகித்தார். தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் சுரேஷ் ராஜன், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பால்வளத் துறை அமைச்சர் மனோதங்கராஜ், நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்த கன்னியாகுமரி மாவட்டம், தாய்த்தமிழகத்துடன் இணைந்த நாளான நவம்பர் 1-ஆம் தேதி அன்று அரசு விழாவாக கொண்டாடுவதற்கு தமிழ்நாடு அரசு ஆணைபிறப்பித்ததன் அடிப்படையில் தாய்தமிழகத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் இணைவதற்கு பாடுபட்டவர்களில் ஒருவரான குமரித் தந்தை மார்ஷல் நேசமணி மணிமண்டபத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.
1956-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ஆம் தேதி நமது கன்னியாகுமரி மாவட்டம், தாய்த்தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந் தற்போது 69 ஆண்டுகள் முடித்து 70வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இன்று நம்முடைய கன்னியாகுமரி மாவட்டமானது சமூக பொருளாதார வளர்ச்சியில் முன்னோக்கி உள்ளது. அதற்கு வித்திட்ட இரத்தம் சிந்திய தியாகிகள் மற்றும் போராடிய அனைத்து இரத்த சாட்சிகளையும் நாம் இந்நேரத்தில் வணங்குகிறோம் வாழ்த்துகிறோம். என கூறினார்.
இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், மார்ஷல் நேசமணி மகன்வழி பேரன் ரெஞ்சித் அப்பலோஸ், உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.



