நாகர்கோவில், ஜன. 26 –
சுசீந்திரம் அருகே உள்ள 33 வயதான பெண் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி கணவர், 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் இந்த பெண் கணவருடன் இருக்கும் போட்டோவையும், வேறொரு வாலிபருடன் இருப்பது போன்ற போட்டோவையும் பதிவிட்டு இருந்தது. அந்த பதிவில் கணவர் உடன் இருக்கும் போட்டோவுக்கு முன் என்ற தலைப்பும், மற்றொரு வாலிபருடன் சித்தரிக்கப்பட்டு இருந்த போட்டோவை தற்போது எந்த தலைப்பும் பதிவிடப்பட்டு இருந்தது.
இன்ஸ்டாகிராமில் இதை பார்த்த அந்த பெண்ணின் உறவினர்கள் தோழிகள் நீங்கள் உங்கள் கணவரை பிரிந்து விட்டீர்களா? இப்போது உங்களுடன் இருக்கும் நபர் யார்? என்று கேட்டு பதிவிட்டும் போன் செய்தும் விசாரித்தனர். இதை பார்த்த அந்த பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இது குறித்து குமரி மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தனர். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. விசாரணையில் அந்தப் பெண்ணின் உறவுக்கார பெண் ஒருவர் இந்த புகைப்படங்களை சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தது தெரிய வந்தது.
இதை எடுத்து அவ்வாறு பதிவு செய்த இளம்பெண்ணை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த மாதம் ஒரு கிரகப்பிரவேச வீட்டில் செல்லும்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பழிவாங்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு போட்டோவை சித்தரித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியதாக கூறியுள்ளார். இது தொடர்பாக தற்போது போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


