நாகர்கோவில், மார்ச் 7 –
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கடந்த 31.12.2024ம் அன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை தந்து திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது ஒவ்வோர் ஆண்டும் குறள் வாரம் கொண்டாடப்படும் என அறிவித்தார்.
அதனடிப்படையில் இந்த ஆண்டு (2026) ஜனவரி மாதத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் குறள் வார விழாவினை முன்னிட்டு திருக்குறள் வினாடி வினா எழுத்துத்தேர்வு மற்றும் பிற போட்டிகள் 09.01.2026 ஆம் நாளன்று நாகர்கோவில், குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், பொதுமக்கள் மட்டும் கலந்து கொள்ளும் குறள் சார்ந்த ஓவியப்போட்டி மற்றும் குறள் ஒப்பித்தல் போட்டிகள் 20.01.2026 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரெய்லி அரங்கத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் வெற்றி பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் அரங்கில் பரிசுகளை மாவட்ட ஆட்சியர் அழகு மீனா வழங்கினார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் தமிழ்வளர்ச்சி துறை போதுமணி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் மாணவ மாணவியர் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.



