தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், பாகலஹள்ளி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 2 லட்சம் மதிப்பீட்டில் செடிகளுக்கு மண் கரை அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி அவர்கள் ஆய்வு செய்தார். உடன் நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் கோ. லோகநாதன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.



