கிருஷ்ணகிரி, செப். 26 –
தேமுதிக கழகப் பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அக்டோபர் 5ம் தேதி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற நிகழ்ச்சிக்கு பொதுமக்களை சந்திக்க வர இருப்பதை ஒட்டி கிருஷ்ணகிரியில் தனியார் திருமண மண்டபத்தில் கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி ஒன்றிய கழக செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளர் கே.ஆர். சின்னராஜ் மற்றும் மாநில மகளிர் அணி செயலாளரும், மாவட்ட பொறுப்பாளருமான திருமதி. மாலதி வினோத் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். அப்போது கழக வளர்ச்சி குறித்தும், கழகப் பொதுச் செயலாளர், கழகப் பொருளாளர், மற்றும் மாநில இளைஞர் அணி செயலாளர் ஆகியோரை வரவேற்பது குறித்தும், மற்றும் அக்டோபர் ஐந்தாம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சி குறித்தும், பல்வேறு கருத்துக்களை விவாதித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் எல். முருகன், மாவட்ட பொருளாளர் லட்சுமணன், மாவட்ட துணை செயலாளர்களான எஸ்.பி. சீனிவாசன், கே.வி. கோவிந்தராஜ், சங்கர், செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, பொதுக்குழு உறுப்பினர்களான வேலு, பலராமன், தர்மலிங்கம், எச். காதர், கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் வஜ்ரவேல், கிருஷ்ணகிரி நகரக் கழக செயலாளர் ரவி, காவேரிப்பட்டினம் ஒன்றிய கழகச் செயலாளர்களான விஜய் வல்லரசு, பிரபு, பர்கூர் ஒன்றிய கழக செயலாளர்களான சரவணன், வடிவேல், போச்சம்பள்ளி ஒன்றிய கழகச் செயலாளர் அப்பாபிள்ளை, மத்தூர் ஒன்றிய கழகச் செயலாளர் விவேகானந்தன், ஊத்தங்கரை ஒன்றிய கழக செயலாளர்களான கதிர்வேல், சதீஷ், காவேரிப்பட்டினம் பேரூராட்சி செயலாளர் அன்வர், இளைஞர் அணி செயலாளர் கணக்கன், விவசாய அணி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாணவரணி செயலாளர் மாரீஸ்வரன், வர்த்தக அணி செயலாளர் விஜயகாந்த், தொண்டரணி செயலாளர் பாட்ஷா, தகவல் தொழில்நுட்ப அணி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் நகர அவை தலைவர் சங்கர் நன்றி உரையாற்றினார்.



