கிருஷ்ணகிரி, ஆகஸ்ட் 12 –
கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலைய எல்லையை சேர்ந்த 17 வயது சிறுமியை ஊத்தங்கரை தாலுகா, கல்லாவி கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் (27), S/o சரவணன், என்பவர் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பாக கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யபட்டு அப்போதைய காவல் ஆய்வாளர் .சுமித்ரா அவர்களால் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு எதிரி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கின் விசாரணை கிருஷ்ணகிரி மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 12.08.2025-ம் தேதி இவ்வழக்கின் எதிரி லட்சுமணனனுக்கு இருபது ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 1,000/- அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் எதிரி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட உள்ளனர். இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற காவலரை காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் உட்கோட்டம், ஓசூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராம் நகர் பகுதியை சேர்ந்த வினோத்(19/22) S/o தண்டாயுதம் என்பவரை கடந்த 22.01.2022-ம் தேதி தின்னூர் வாசவி நகர் பகுதியை சேர்ந்த 1) சந்தோஷ்@குர்லா(23), S/o முத்து, 2) சுல்தான்(22) S/o ஷான் பாஷா ஆகியோர் முன்விரோதம் காரணமாக கொலை செய்தது சம்மந்தமாக இறந்துபோனவரின் நண்பர் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் நகர காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அப்போதைய காவல் ஆய்வாளர் .விஜய்குமார் அவர்களால் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு எதிரிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கின் விசாரணை ஓசூர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 12.08.2025-ம் தேதி இவ்வழக்கின் எதிரிகள் சந்தோஷ்@குர்லா மற்றும் சுல்தான் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 3,000/- அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் எதிரிகள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட உள்ளனர். இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற காவலரை காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.



