பூதப்பாண்டி, அக்டோபர் 16 –
குமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக காளிகேசம் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. காளிகேசம் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனை தொடர்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக காளிகேசம் வன சுற்றுலா பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல குமரி மாவட்ட வனத்துறை தடை விதித்துள்ளது.மேலும் உள்ளூர் மக்கள் காளிகேசம் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, ஆற்றின் தரை பாலம் வழியாக கடந்து மறுபுறம் செல்லவோ கூடாது எனவும் வனத்துறையால் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளார்கள்.
குமரி மாவட்டத்தில் நேற்று முதல் அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள கீரிப்பாறை, காளிகேசம், மாறாமலை, வாழையத்து வயல், கரும்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காளிகேசம் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் காளிகேசம் பகுதியில் அமைந்துள்ள தரைப்பாலம் காட்டாற்று வெள்ளத்தில் முழுவதுமாக மூழ்கியது. இதனை தொடர்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக காளிகேசம் வன சுற்றுலா பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல குமரி மாவட்ட வனத்துறை தடை விதித்துள்ளது.



