கோவை, டிச. 22 –
கோவை மாவட்டம் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பில் நிர்வாகியான அஸ்மத்துல்லா அவருடைய நண்பரின் மகளின் திருமண நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன்
போத்தனூரில் உள்ள தனியார் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
அதே திருமண நிகழ்ச்சிக்கு வருகை தந்த லவ்லி நசீர் வி.எம். அலி மற்றும் அவருடன் வந்த
சிலர் அஸ்மத்துல்லாவை வழிமறித்து நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை பற்றி விசாரித்து ஆபாச வார்த்தைகளை உபயோகித்து தாக்க முயற்சித்துள்ளனர்.
இதை சற்றும் எதிர்பாராத காங்கிரஸ் நிர்வாகி அஸ்மத்துல்லா பக்குவமாக கையாண்டு போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் லவ்லி நசீர், வி எம் அலி மற்றும் சிலர்
மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


