தேனி அக் 14: தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மேலக்கூடலூரில் அமைந்துள்ள மிகச்சிறந்த புண்ணிய ஸ்தலமான மந்தையம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பெண்கள் மாவிளக்கு முளைப்பாரிகள் ஊர்வலமாக வந்து முல்லையாற்றில் முளைப்பாரிகள் கரைக்கப்பட்டன. மேலும் விளையாட்டுப் போட்டிகளில் கபடி,சைக்கிள்,மராத்தான் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன இதில் வெற்றி பெற்ற நபர்களை ஊக்குவிக்கும் விதமாக தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ. மகாராஜன் கூடலூர் நகராட்சி நகர் மன்ற தலைவர் பத்மாவதி லோகந்துரை திமுக நகர செயலாளர் நகர் மன்ற உறுப்பினருமான லோகந் துரை ஆகியோர் பங்கேற்று பரிசுகளை வழங்கி மனதார பாராட்டினார்கள் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கிராமத் தலைவர் முத்து செயலாளர் அறிவழகன் பொருளாளர் வின்சென்ட் மற்றும் கோவில் நிர்வாகிகள் வெகு சிறப்பாக செய்திருந்தனர்



