நாகர்கோவில், பிப். 16 –
குமரி மாவட்டம் நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளியில் “மாற்றுத் திறனாளிகளுக்கான சமூக உட்சேர்க்கையும் மரியாதையும் வளர்த்தல்” என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்காக சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஹோலி கிராஸ் கல்லூரி சமூகப்பணி துறை பயிற்சி மாணவி சௌபர்ணிகா சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான சமூக உட்சேர்க்கையும் மரியாதையும் வளர்த்தல்” என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்காக சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி கார்மல் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் டார்வின் மோசஸ் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சி சமூகப்பணி துறைத் தலைவர் மற்றும் ஆசிரியர் மேரி தீபா மற்றும் உதவி பேராசிரியர்சத்திய ராஜ் மேற்பார்வையில் நடைபெற்றது. மாற்றுத் திறனாளிகளுக்கு பரிவு, உட்சேர்க்கை மற்றும் சமத்துவமான மரியாதை வழங்குவதின் அவசியம் வலியுறுத்தப்பட்டது. கலந்துரையாடல்கள் மற்றும் செயற்பாடுகள் மூலம் மாணவர்களுக்கு பாகுபாடு தவிர்த்து ஆதரவான அணுகுமுறையை வளர்த்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



