மார்த்தாண்டம், மார்ச் 16 –
களியக்காவிளை அருகே உள்ள புதுப்புரைக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஜெனின்லீ சத்மர் (47). இவர் தனக்கு சொந்தமான 7 சென்ட் நிலத்தில் வாழை மரங்களை நட்டு பயிரிட்டு வந்துள்ளார்.
சம்பவத்தன்று இவரது தோட்டத்தில் உள்ள சுவரை முன் விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த முருகன், ஜீனோ உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல் உடைத்துள்ளனர். பின்னர் தோட்டத்தில் உள்ளே சென்று அங்கு நடப்பட்டிருந்த வாழை மரங்களையும் சேதப்படுத்தி உள்ளனர்.
சேதமடைந்த வாழை மரங்களின் மதிப்பு ரூ. 2.50 லட்சம் ஆகும். இதுகுறித்து ஜெனின்லீ களியக்காவிளை போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் முருகன், ஜீனோ உள்ளிட்ட 10 பேர் கும்பல் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


