கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த குக்கலப்பள்ளி என்னுமிடத்தில் உள்ள ஆக்சல் டெக் என்னும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த உள்ளூர் தொழிலாளர்கள் 20 பேரை, தொழிற்சாலை நிர்வாகத்தினர் தயாரிப்பு மந்தம் எனக்கூறி வேலையிலிருந்து நீக்கிவிட்டு வடமாநில தொழிலாளர்களை வேலையில் சேர்த்துக்கொண்டு கனரக லாரி என்ஜின் உதிரிபாகங்களை தயாரித்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதால் ஒருமாதமாக வேலையின்றி தவிக்கும் 20 உள்ளூர் தொழிலாளிகள் மீண்டும் வேலை வழங்கக்கோரி தொழிற்சாலை முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..



