நாகர்கோவில், ஏப். 15 –
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் கன்னியாகுமரி மாவட்ட தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடியுடன் ரோடு ஷோவில் கலந்து கொள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கன்னியாகுமரி மாவட்டம் வந்தார்.
அவரை கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்று கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் என்.தளவாய்சுந்தரம் வெற்றிக்காக கடினமாக போராடுவேன் எனவும், மாவட்டத்தில் ஏனைய தொகுதிகளில் அதிமுக, பாஜக கூட்டணி வெற்றிக்கு கலப்பை மக்கள் இயக்கம் தீவிரமாக பணியாற்றும் என பி.டி.செல்வகுமார் வாக்குறுதி அளித்தார். உடன் கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய்சுந்தரம் உள்ளார்



