கன்னியாகுமரி, மார்ச் 23 –
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றை இணைக்கும் வகையில் கண்ணாடி பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.
இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் காலை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடை வெளி இன்றி தொடர்ச்சியாக இந்த படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பொதிகை என்ற படகு பழுதடைந்த நிலையில் இருந்ததால் கன்னியாகுமரி படகு துறையில் இருந்து இந்த படகு நேற்று சின்னமுட்டம் துறைமுகத்துக்கு கடல் வழியாக கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள யடகு கட்டும் தளத்தில் கரை ஏற்றப்பட்டது.
இந்த படகு சீரமைக்கும் யணி ரூ.5 லட்சம் செலவில் நடைபெற்று வருகிறது. இந்த சீரமைக்கும் பணி இரவு கலாக நடந்து வருகிறது. இந்த படகு சீரமைக்கும் பணி இன்னும் 2 நாட்களில் முடிக் கப்பட்டு மீண்டும் கடலில் இறக்கப்பட உள்ளது. சின்ன மூட்டம் படகு கட்டும் தளத்தில் இருந்து கடலில்இறக்கப்பட்டு கடல் வழியாக கன்னியா குமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக டகுதுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
அதன்பிறகு கடலில் வெள்ளோட்டம் விடப்பட்டு கோடை விடுமுறை சீசனையொட்டி மீண்டும் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.



