கிருஷ்ணகிரி, செப். 2-
கடந்த ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணத்தின் போது பர்கூர் பொதுக்கூட்டத்தில் போச்சம்பள்ளி சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டு வீடு திரும்பிய போது அவர்கள் வந்த வாகனம் நிலைத்தடுமாறி விபத்துக்குள்ளானது.
விபத்தில் காயம் அடைந்தவர்களை அதிமுக கழகப் பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைப்படி கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி சமுதாயக்கூடத்தில் கிருஷ்ணகிரி ஒன்றிய செயலாளர் திருமால் தலைமையில் கிழக்கு மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான அசோக்குமார், ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் பொதுக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வம் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக கழகத் துணைப் பொதுச் செயலாளரும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி. முனுசாமி கலந்து கொண்டு விபத்தில் படுகாயமுற்ற 40 கழக நிர்வாகிகளுக்கு 25 இலட்சம் நிவாரண நிதி வழங்கினார்.
இதில் படுகாயமடைந்த 12 நபர்களுக்கு தலா ரூபாய் 1.50 இலட்சமும் லேசான காயமுற்ற மற்றவர்கள் 28 பேருக்கு ரூபாய் தலா ரூபாய் 25,000 ஆயிரம் காசோலைகள் மற்றும் பழங்கள் வழங்கி ஆறுதல் கூறினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் தென்னரசு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ், மாவட்ட துணை செயலாளர் சாகுல் அமீது, பொருளாளர் சுந்தரவடிவேல், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.எம். மாதையன், தூயமணி மருத்துவ அணி செயலாளர் மருத்துவர் இளையராஜா, ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், ரவிச்சந்திரன், வேடி, சாமிநாதன், பையூர் ரவி, நரேஷ்குமார், சக்கரவர்த்தி, நகர செயலாளர்கள் சிக்னல் ஆறுமுகம், துரைஷ் ராஜேந்திரன், அண்ணாதுரை, கழகப் பிரமுகர் கிளை செயலாளர் ஒப்பந்ததாரர் கார்த்திக் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



