ஈரோடு, செப்.15:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னாள் அமைச்சர் மற்றும் ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் முத்துசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் எம்.பி. அந்தியூர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. வி.சி. சந்திரகுமார், மாநகர செயலாளர் சுப்பிரமணியம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.



