திருப்பூர், மே 30 –
திருப்பூர் அவிநாசியில் உயர்தர மருத்துவ சிகிச்சை, அவசர தீவிர சிகிச்சை மற்றும் பலதுறை வெளி நோயாளிகள் பிரிவுடன் பல்வேறு துறை சார்ந்த மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களின் மிகச்சிறந்த அர்ப்பணிப்போடு கூடிய திறமை நிபுணத்துவம் இணைந்து திருப்பூரில் 32 வருடங்களாக அனுபவம் உள்ள ரேவதி மெடிக்கல் சென்டரில் புதிய கிளையினை அவிநாசி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்காக அர்ப்பணித்தனர்.
இந்த நிகழ்வில் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி தலைமை ஏற்றார். டாக்டர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். டாக்டர் விஷ்ணு ராகவ் வரவேற்புரையாற்றினார். டாக்டர் சிகாமணி திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். விழாவில் பல்வேறு துறை முக்கிய பிரமுகர்கள், மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.



