ஈரோடு, ஏப்ரல் 30 –
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் கடந்த 23 ந் தேதி மாலை வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஓட்டு எண்ணும் இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு ஈரோடு மேற்கு மொடக்குறிச்சி பவானி பெருந்துறை அந்தியூர் ஆகிய 6 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை சித்தோடு ஐ ஆர் டி டி கல்லூரியிலும் கோபி பவானி சாகர் ஆகிய 2 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை கோபி கலைக்கல்லூரியிலும் நடைபெறுகிறது.
இங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் கண் காணித்து வருகிறார்கள்.
வருகிற 4 ந் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இந்த இடங்களில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அலுவலர் கந்தசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூன்றடுக்கு பாதுகாப்புடன் கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் எல்.இ.டி. திரையில் கண்காணிக்கப்பட்டு வருவதையும்
மற்றும் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பதிவேடுகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து வாக்கு எண்ணும் மையமான சித்தோடு, அரசினர் பொறியியல் கல்லூரி மற்றும் வேயிசெட்டிபாளையம், கோயி மற்றும் அறிவியல் சுல்லூரியில் குடிநீர் வசதி கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும், வாக்கு எண்ணும் அறை வாகனம் நிறுத்துமிடம் நடால் வாக்குகள் வைப்பறை, செய்தியாளர்கள் அறை, கவர்கண்காணிப்பு அறை மற்றும் பல்வேறு முன் ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



