ஈரோடு, அக். 4 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 12.08.2025 அன்று தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தைச் சென்னையில் தொடங்கி வைத்து முதலமைச்சரின் தாயுமானவர் திட்ட வாகனங்களின் சேவையையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டத்தில் மக்கள் நலன்சார்ந்த இத்திட்டம் சிறப்புக் கவனம் தேவைப்படும் பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவதுடன் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யும் இத்திட்டத்தின் வாயிலாக 924 முழு நேர மற்றும் 339 பகுதி நேர நியாயவிலைக் கடை என மொத்தம் 1,263 நியாயவிலைக் கடைகளைச் சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட 79,057 மேற்பட்ட பயனாளர்களும், 2,735 மாற்றுத்திறனாளி பயனாளர்களுக்கு மொத்தம் 81.792 பயனாளிகளுக்கு அவர்தம் இல்லங்களுக்கே சென்று குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டமானது ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி ஞாயிற்றுக் கிழமைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மின்னணு எடைத்தராசு, விற்பனை முனை இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் குடிமைப் பொருட்களைப் மூடிய வாகனங்களில் பாதுகாப்பாகத் தகுதியுள்ள பயனாளர்களின் இல்லத்திற்கே சென்று நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் விநியோகித்து வருகின்றனர். மக்கள் நலன் சார்ந்த இத்திட்டம் நலிவுற்றப் பிரிவினரின் வாழ்வாதாரத்தைச் சிறப்புறச் செய்வதுடன் அவர்தம் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்வதாகும்.
அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டத்தில் பயன்பெற்ற பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்தார்கள்.



