ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் கட்டுமான பணியிடத்து விபத்தில் மரணமடைந்த பழனிசாமி என்பவரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியாக ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார் இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் தொழிலாளர் துறை உதவி இயக்குனர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.



