ஈரோடு, ஆக. 13 –
சுதந்திர தின விழாவை யொட்டி போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ஈரோடு திண்டல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இந்த பேரணி பள்ளியில் இருந்து தொடங்கி திண்டல் வரை சென்றது. இதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் போதைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடியும் கோஷங்கள் எழுப்பியபடியும் சென்றனர்.
டிவிஆர் கம்பெனி மற்றும் டால்மியா சார்பில் நடந்த இந்த பேரணியை தலைவர் குமாரசாமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குருமூர்த்தி, கவுன்சிலர் கோகிலவாணி, பள்ளி தலைமையாசிரியர் சிவகாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முன்னதாக பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.
சிமெண்ட் விற்பனையாளர் டி வி ஆர் கம்பெனி உரிமையாளர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் டால்மியா சிமெண்ட் வர்த்தக மேலாளர் வெங்கடேஷ் மற்றும் பணியாளர்கள் சசி குமார், கணேசன், சுரேந்தர் ஆகியோர் சார்பில் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பெல்ட் போன்றவை வழங்கப்பட்டன.



