மயிலாடுதுறை, செப்டம்பர் 10 –
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். இதனை கொண்டாடும் விதமாக மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே பாரதிய ஜனதா கட்சியின் நகரத் தலைவர் ராஜகோபால் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட தலைவர் அகோரம், மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு ஆகியோர் கலந்து கொண்டார்.
தொடர்ந்து பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கையில் தேசிய கொடியுடன் வெற்றி முழக்கங்களை எழுப்பினர். இதில் வழக்கறிஞர் ராஜேந்திரன், கோவி சேதுராமன், மோடி கண்ணன், எஸ்.டி.எம். செந்தில், சித்ரா முத்துக்குமார், அருள்ராஜ், மயில் என்கின்ற ரவி, வழக்கறிஞர் கபிலன், பொதுச் செயலாளர் பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



