இரணியல், ஜுன் 6 –
நாகர்கோவில் அருகே உள்ள இடலாக்குடி என்ற இடத்தை சேர்ந்தவர் சலீம் (45). இவர் ஆட்டோ வாடகைக்கு ஓட்டி வருகிறார். கடந்த 3ம் தேதி தக்கலை சென்று பயணிகள் இறக்கி விட்டு நாகர்கோவில் திரும்பி வரும் போது தோட்டி கோடு அருகே வைத்து சாலையை கடக்க முயன்ற சுமார் அறுபது வயது முதியவர் மீது மோதியதில் தலை, கை, கால்கள் படுகாயம் அடைந்த நிலையில் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வில்லுக்குறி விஏஒ குமாரி சிந்து அளித்த புகாரில் பேரில் இரணியல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து இறந்து போன முதியவர் யார் எந்த ஊர் என்ன பெயர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


