திருவள்ளூர், மே 1 –
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த பழைய பம்மதுகுளம் மதுரா எல்லையம்மன் பேட்டை கிராமத்தில் எழுந்தருளி, அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ செல்வசித்தி விநாயகர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் திருக்கோயில்களில் புணராவர்த்தன ஜீர்னோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.
வளர்பிறை சப்தமி திதி புனர்பூசம் நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதனத்தில், ஆகம முறைப்படி சிவாச்சாரியார்களால் வேதமந்திரங்கள் முழங்க புனித நீர் கலசத்தில் பூஜிக்கப்பட்டு மேளங்கள் முழங்க சிவாச்சாரியார்களால் கொண்டு செல்லப்பட்டு விமான கோபுரத்தின் மேல் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.
ஏராளமான பொதுமக்கள் கிராமவாசிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகை தந்த அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. ஆலயத் தலைவர் பி. ஹரிகிருஷ்ணன் மற்றும் ஆலய விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் சிறப்பாக கும்பாபிஷனை நடத்தினர்.



