நாகர்கோவில், செப்டம்பர் 8 –
கன்னியாகுமரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் செந்தில் குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய அஞ்சல் துறை சார்பாக கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 16ம் தேதி நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் நடக்கிறது. அன்று காலை 11 மணிக்கு குறைதீர்க்கும் கூட்டத்தில் அஞ்சல் துறை சேவையில் ஏதேனும் குறைகள் இருப்பின் பொதுமக்கள் அதனை இக்கூட்டத்தில் நேரில் வந்து தெரிவிக்கலாம். அல்லது தங்கள் குறைகளை தபால் மூலமாக அனைத்து விவரங்கள் மற்றும் ஆவணங்களுடன் செந்தில்குமார், அஞ்சலக கண்காணிப்பாளர், கன்னியாகுமரி கோட்டம், நாகர்கோவில் 629 001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். தபால் உரையின் மீது முன் பக்கம் மேல் பகுதியில் தபால் சேவை குறைதீர்க்கும் முகாம், செப்டம்பர் 2025 என்று தெளிவாக குறிப்பிட்டு இருக்க வேண்டும். புகார் மனுக்கள் வருகிற 12ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


