தென்தாமரைக்குளம், பிப். 12 –
நூறு நாள் வேலை திட்டம் மற்றும் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை வஞ்சித்த மத்திய அரசையும் அதற்கு துணை போகும் அதிமுகவையும் கண்டித்து அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இன்று காலை 11 மணிக்கு சாமிதோப்பு போஸ்ட் ஆபீஸ் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு தலைமை வகித்தார். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ். பார்த்தசாரதி முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி தலைவி அன்பரசி ராமராஜன், மாவட்ட பிரதிநிதி தனசம்பத், அறிவழகன், கரும்பை மணி, தென் தாமரைக்குளம் பேரூராட்சி கவுன்சிலர் கான்ஸ்ட்டைன், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி கவுன்சிலர் பிரேம் ஆனந்த், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொன்.ஜாண்சன், தமிழன் ஜானி, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தாமரை பிரதாப், தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் சந்திரகலா, விளையாட்டு மேம்பாட்டு பிரிவு நிர்வாகி சுந்தர்சிங், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் அகஸ்தீஸ்வரம் வட்டார முன்னாள் தலைவர் முருகேசன், மற்றும் நிர்வாகிகள் அய்யாபழம், மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். மாலை 3 மணிக்கு அகஸ்தீஸ்வரம் போஸ்ட் ஆபீஸ் அருகிலும், 4 மணிக்கு கொட்டாரம் போஸ்ட் ஆபீஸ் அருகிலும், 4.30 மணிக்கு தென் தாமரைக்குளம் போஸ்ட் ஆபீஸ் அருகிலும், 5 மணிக்கு சுசீந்திரம் போஸ்ட் ஆபீஸ் அருகிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது



