திருவள்ளூர், செப். 08 –
திருவள்ளூர் மாவட்டம் மாண்டிசோரியில் ஒமேகா பள்ளியின் அங்கமான ஹார்ட்ஃபுல்னஸ் இன்டர்நேஷனல் பள்ளியின் பிரம்மாண்டமான தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் புகழ்பெற்ற பேச்சாளரும் கல்வியாளருமான டாக்டர் பர்வீன் சுல்தானா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பள்ளி தாளாளர் பரத் மாதவன் பள்ளி முதல்வர் கலைவாணி ஆகியோர் தலைமையில் சுரேஷ் மற்றும் பள்ளி வளாக மேலாளர் வெங்கடேஸ்வர பிரசாத் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் பேசுகையில் புதிய மாண்டிசோரி சூழல் கைகளினால் செய்து கற்றல் மற்றும் முழுமையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் குழந்தை மையக் கற்றல் இடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகள் தங்கள் சொந்த வேகத்தில் கற்றுக்கொள்ளவும், வாழ்நாள் முழுவதும் கற்றலின் மீது ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளவும் உதவும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பல்வேறு பொருட்கள் மற்றும் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.
இந்த முயற்சி பாரம்பரிய முறைகளைக் கடந்து ஆரம்ப வயதிலிருந்தே படைப்பாற்றல் மற்றும் பகுப்பாய்வு சிந்தனையை வளர்க்கும் கல்வி அனுபவத்தை வழங்குவதற்கான பள்ளியின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. இந்தச் சிறப்பான நாளில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். தரமான கல்விக்கான ஹார்ட்ஃபுல்னஸ் இன்டர்நேஷனல் பள்ளியின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. மாண்டிசோரி சூழல் குழந்தைகள் தங்கள் திறனை ஆராய்வதற்கும், எதிர்காலத்திற்கான வலுவான அடித்தளத்தை உருவாக்குவதற்கும் ஒரு அற்புதமான இடம் என்று கூறினார்.



