பூண்டி, செப். 23 –
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பட்டரைப்பெரும்புதூர் கிராமம், பஜனை கோவில் தெருவில் வசிக்கும் மக்கள் வருடந்தோறும் பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் தேக்கும் பொழுதெல்லாம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் பெரும் துன்பத்தை அடைகின்றனர். மேலும் கடந்த 30 ஆண்டு காலமாக இம்மக்கள் பலமுறை மனு அளித்தும் இவர்களுக்கு மாற்று இடம் அரசு சார்பில் வழங்கப்படவில்லை தெரிவிக்கின்றனர்.
தற்பொழுது கலர்மா நகரில் வசிக்கும் மக்களுக்கு 60 நபர்களுக்கு மாற்றிடம் வழங்கப்பட்ட நிலையில் பஜனை கோயில் தெருவில் வசிக்கும் அறுபது குடும்ப மக்கள் நலனை கருத்தில் கொண்டு மாற்று இடம் வழங்க வேண்டும் என பூண்டி நீர் பிடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஊராச்சிக்குட்பட்ட புன்செய் தரிசு நிலத்தில் மாற்று இடமாக இலவச வீட்டு மனை பட்டாவை வழங்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.



