திருச்சி, ஏப். 22 –
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நேற்று கோடை திருநாள் உற்சவம் தொடங்கியது. நம் பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கோடை நாலுகால் மண்டபத்தை அடைந்தார். பக்தர்களால் வழங்கப்பட்ட மல்லிகை பூக்களையும் பூப்போர்வையையும் சாற்றி நம்பெருமாள் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.



