ஈரோடு மே 18
ஈரோடு செங்கோட்டை அரிமா சங்கத்தின் சார்பில் பன்னாட்டு அரிமா சங்கங்களின் சேவை திட்டங்களில் ஒன்றான பசிப்பிணி போக்கும் திட்டமாக சின்னியம் பாளையத்தில் உள்ள அன்பு இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்கள் 60 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது .
இதில் ஈரோடு செங்கோட்டை அரிமா சங்கத்தின் தலைவர் ரவிக்குமார் தலைமையில் ஜீவா சண்முகம், வட்டார தலைவர் பரந்தாமன், மற்றும் சங்கரன் செயலாளர் சேவை ராஜா மணி ,தங்கமணி உட்பட பலர் கலந்து கொண்டு முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.


