ஈரோடு, செப். 29 –
ஈரோடு கள்ளுக்கடை மேடு பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. மாநில பொது செயலாளர் யுவராஜா தலைமையில் நடந்த இந்த முகாமில் முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர், ஈரோடு மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், பொதுக் குழு உறுப்பினர் சந்திர சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமை த.மா. காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தொடங்கி வைத்தார்.
வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ரோட்டராக்ட் சங்கம் ஆகியவை சார்பில் நடந்த இந்த முகாமில் பொது மருத்துவம், இருதய சிகிச்சை, மகளிர் நலம், எலும்பு மூட்டு மாற்று சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை, குடல் மற்றும் பொது அறுவை சிகிச்சை, குழந்தைகள் நலம் போன்றவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.



