தருமபுரி, செப் 10:
தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளின் தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை அறிமுகம் செய்து வைத்தார்.
மாவட்ட அளவிலான இப்போட்டிகளில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் முறையாக செய்து கொடுக்க வேண்டும் என துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் தருமபுரி உதவி ஆட்சியர் ஜார்ஜ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சிவரஞ்சன், தருமபுரி வட்டாட்சியர் சுகுமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கபடி பயிற்றுநர் அரவிந்த் ராஜா, உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.



