ஈரோடு, மே 6 –
ஈரோடு ராஜாஜிபுரத்தில் சக்தி மாகாளி அம்மன் மதுரை வீரன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 28 ம் தேதி பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இன்று காலை அம்மனை காவிரி ஆற்றங்கரையிலிருந்து புஷ்பரதத்தில் அலங்கரித்து கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. அப்போது பக்தர்கள் பூச்சட்டி, இளநீர் காவடி மற்றும் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். தொடர்ந்து பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.
மாலையில் அம்மனை அழைத்து வந்து பூஜை நடத்தி பலிபீடம் ஆராதனை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இன்று மாலை கருப்பராயன் கோவிலில் இருந்து மதுரவீரன் சிலையை புஷ்புரதத்தில் அலங்கரித்து ஊர்வலமாக கொண்டுவரும். 8 ந் தேதி பக்தர்கள் சாமி வேடமிட்டு கேளிக்கைகள் நடத்தும் நிகழ்ச்சியும் அம்மனை புஷ்பரதத்தில் அழைத்து வரும் நிகழ்ச்சியும் பூஜைகளும் நடக்கிறது.
9 ந் தேதி மாலை சக்தி கரகத்தை கோவிலிலிருந்து எடுத்துச் சென்று காவிரியாற்றில் விடுதல் இதையடுத்து காலை 9 மணி பக்தர்கள் மஞ்சள் நீராட்டுதல் போன்ற நிகழ்ச்சி நடக்கிறது. 10 ந் தேதி தேதி காலை மறு பூஜையுடன் விழா முடிகிறது. அன்று அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருவிழா குழுவினர் செய்துள்ளனர்.



