திருவட்டார், அக். 13 –
குமரி மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆற்றூர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் ஜெயசுதர்ஷன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் சிவகுற்றாலம், இணை செயலாளர் மேரி கமலாபாய், துணை செயலாளர்கள் சலாம், அல்போன்சாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் சிலவஸ்டர் வரவேற்புரை ஆற்றினார். அமைப்பு செயலாளரும் குமரி மேற்கு மாவட்ட பொறுப்பாளருமான சின்னத்துரை சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கி பேசினார்.
அவர் கூறுகையில்: விளவங்கோடு, பத்மநாபபுரம் தொகுதியில் பூத் கமிட்டி பணிகள் இறுதி வடிவத்தை எட்டும் நிலையில் உள்ளது. தமிழகத்தில் மாற்றம் என்பது உறுதியாகிவிட்டது. விடியல் ஆட்சியை அகற்ற மக்கள் முடிவு செய்து விட்டார்கள். நமக்கு நல்ல கூட்டணி அமைய உள்ளது. மக்கள் ஆதரவும் அதிகமாக உள்ளது. அதனால் தான் நமது பொதுச்செயலாளர் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. பெண்கள் அலைகடல் என திரண்டு வருகிறார்கள்.
தேர்தலுக்கு ஆறு மாதங்கள் தான் உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு இன்னும் மூன்று மாதங்களில் வர உள்ளது. இதனால் நேரத்தை வீணடிக்காமல் நல்ல முறையில் நாம் அனைவரும் பயன்படுத்தி திட்டமிட்டு பணி செய்ய வேண்டும் வெற்றி நமதே நமது பயணம் நல்லதாக அமையும்.
குமரி மேற்கு மாவட்டத்தில் மூன்று தொகுதிகள் உள்ளது. அந்த 3 தொகுதிகளையும் அதிமுக தலைமையிலான கூட்டனி வெற்றி பெற்று பொதுச்செயலாளர் எடப்பாடியாரிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்காக அனைத்து கட்சி நிர்வாகிகள் இப்போதை இருந்தே வீடு தோறும் சென்று கள பணியாற்ற வேண்டும். என பேசினார்.
ஒன்றிய செயலாளர்கள் ஜெயதாஸ், நிமால், புருஸ்லிகோபால், ஜார்ஜ், ஷைன்ஜோஸ், எட்வின் ராஜ்குமார், அணி செயலாளர்கள் சக்கீர் உசேன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.



